×

பிலிப்பைன்ஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு: 6 லட்சம் பேர் பாதிப்பு

மணிலா: பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸில் கிறிஸ்துமஸ் வார இறுதியில் இடைவிடாது பெய்த கனமழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வடக்கு மின்டானோவில் உள்ள மிசாமிஸ் ஓசிடென்டல் மாகாணத்தில் 4,500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இதனால் பல பகுதிகளில் குடிநீர் மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கனமழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 19 பேர் மாயமாகிவிட்டனர். அவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை….

The post பிலிப்பைன்ஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு: 6 லட்சம் பேர் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Philippines ,Manila ,Christmas weekend ,Philippines… ,Dinakaran ,
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!